காதோரம் சொல்கிறேன்



நீ உலர்த்திப் போட்ட
புடவையில் இருக்கும்
பூக்களை முகர விருப்பம்!!!

நீ புரட்டி வைத்த
புத்தகத்தில் ஒரு முத்தம்
பதித்து வைக்க விருப்பம்!!!

நீ வந்து போகும்
கனவுகளில் உன்னைப்
புகைப்படம் எடுக்க விருப்பம்!!!

உன் மணிக்கட்டில்
கைக்கடிகாரம் செய்த
வெள்ளைத் தடத்தைத்
தடவிப் பார்க்க விருப்பம்!!

நீ சோம்பல் முறிக்கும்
சோபித்தை
விழியில் பருக விருப்பம்!!!

உன் பெருமூச்சின்
உஸ்ணத்தை என்னில்
ஏற்றிக் கொள்ள விருப்பம்!!!

நீ நறுக்கிப் போட்ட
நகத்தில் எனக்கோர்
மோதிரம் செய்ய விருப்பம்!!!

உன் உச்சி நெற்றியில்
தூறலாய் விழுந்து
இறங்கி வழிய விருப்பம்!!!

உன் அசைவுகளை கொண்டு
இன்னொரு அஜந்தா
எழுப்பிப் பார்க்க விருப்பம்!!!

உன் இல்லத்திலிருக்கும்
காற்றாடியாய் ஜனித்து
உனக்கு காற்று வீச விருப்பம்!!!

உன் சேலைத் தலைப்புக்குள்
முகம் மூடிக் கொண்டு
மூச்சிழுக்க விருப்பம்!!!

உன் பாதச்சுசட்டை
மழை நனைக்க வந்தால்
அதற்க்கு குடை பிடிக்க விருப்பம்!!!!!

நீ என்னை பார்த்த
நிமிசம் போதும்
புவி ஈர்ப்பு பிரிய விருப்பம்!!!!

உன் உதட்டை தீண்டிய
தேனீர் கோப்பைக்கு
விருது வழங்க விருப்பம்!!!!


உன் உடைந்த வளையல்
துண்டுகளெடுத்து
எனக்காகவொரு
கிலுகிலுப்பு செய்ய விருப்பம்!!!!


இறுதியாய் இறுதியாய்
என்னை உந்தன்
நிழலில் புதைக்க விருப்பம்!!!!!


என்னை புதைத்த இடத்தில்
உனக்கோர் பூவாய் நான்
முளைத்து நிற்க்க விருப்பம்!!!!!

எனது ஆயுதம்!!!

எனது ஆயுதம்!!!

ஒரு ஆயுதம் என்னிடம் 7 வருடமாக குடிகொண்டு இருக்கிறது!!
எங்கு போனாலும் என் சட்டைப்பய்யில்
எத்தனை களம் கண்டது!!
ஆனால் ஒரு களத்திலும் போராட வில்லை!
தேவை ஏற்படலை போல?
அது ஒன்றுமில்லை
BLACK ATLAS CHOORTY பேனா!
ஒரு பச்சை TAPE சுத்தியது அதன் பெயரின் ஒரு எழுத்து(?) தெரியும் படியாக‌
களம் ஒன்றுமில்லை
O/L,A/L,UNIVERSITY SEMISTARS EXAMS
எழுதாத பேனா எதற்க்கு
COMPANY மூடியிருப்பார்களோ தெரியாது?
ஏன்
அண்ணா சொல்லுவான் EXAM எண்டால் 4/ 5 பேனா கொண்டுபோ!!
என் மனம் சொல்லும் BLACK ATLAS CHOORTY மறந்திடாதை!!
(புது பேனாவால் முதலில் எழுதுவது ........................... என்பது வேறை கதை.)
இன்றும் என் சட்டை பையில்!!
அப்படி என்ன விசேசம்??
ஒண்டுமில்லை

அந்த பேனாவால்தான்
முதல் முதல் என்னவளுக்கு
ஒரு வாழ்த்து அட்டை எழுதினேன்!!
அதன் பின் எழுதவேயில்லை!!!
என்னவளே உன் முகவரி தா!!
எழுததுடிக்கிறது பேனா!!!!!!!!!!!!!

காதல் கவிகள்

மனித உரிமையில்
முதல் உரிமை
காதலிக்கும் உரிமைதான்.


காதல் நேசிக்க மறந்தவர்களை ஒருபோதும் நேசிப்பதில்லை..

வழ்க்கையின் உச்சக்கட்ட சந்தோசம் நாம் காதலிக்கப்டுவதுதான்,

ஆசைகொண்ட வாலிபம் போடுகின்ற நாடகம் காதல்...


காதலையும் வலியையும் முதல் அனுபவம் வரும்வரை யாரும் உணர்வதில்லை!!!


நன்றி!
கவிகளே!!

சீதனம்

“இந்தியா உத்தரப்பிரதேசம்- லக்னோ ல இருந்து 300km தொலைவில இருக்கற ஒரு கிராமத்தில (G)குஞ்சன் என்கிற ஒருத்தர் கட்டிய மனைவி ஆஷா தேவியிடம் மீண்டும் மீண்டும் சீதனம் கேட்டு நச்சரித்து முடிவில , மனைவியோட கூந்தலை முற்றாக மழித்து மொட்டையாக ஊர்வலம் கூட்டிபோயிருக்க்றார்"

இது ஹோசியா அக்காவிடம் சுட்டது!!!
நாம் ஏன் இந்தியா செல்ல வேண்டும். எமது நாட்டில் இந்த சீதன கொடுமை இல்லையா?எமது நாட்டின் கல்வியறிவு விகிதம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது எவ்வளவு அதிகம்.ஆனாலும் இருக்கிறது சீதனகொடுமை.எனக்கு ஏன் சீதனம் வாங்குகிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.கேட்டால் அப்பா அம்மாவை சாடுகிறார்கள். ஏன் நீங்கள் சுயமாக சிந்திக்க தெரியாதவர்களா.?
சுயமாக சம்பாதிக்க தெரியாதவர்களா?
சுயமாக சிந்திக்க சம்பாதிக்க தெரியாதவர்க்கெல்லாம் ஏன் திருமணம்.?
அவன் வாங்கிறான் என்பதற்க்காக நீ வாங்க வேண்டுமா? முதலில் வாழ்க்கை என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள். வெறுமனே பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை!
இலங்கைத்தமிழருக்கு வாழ்க்கையின் அர்த்தம் மறந்து போய் பல வருடங்கள் ஆகின்றன!
சொல்வதற்க்கு இருக்கின்றதே சாட்டு யுத்தம்.முப்பது வயது தாண்டு மட்டும் பெற்றோரின் உதவியை எதிர்பார்ர்கிறோம். பின் சீதனத்தை எதிர்பார்க்கிறோம்.
கேட்டால்,எங்கடை நாட்டிலை சீதனம் இல்லாமல் சமாளிக்கேலாதாம்!
ஏன் சகோதர மொழி பேசுபவர்கள் சீதனம் வாங்குபவர்களா??
காதலித்து பின் சீதனம் கேட்டு காதல் குலைந்த சந்தர்ப்பங்கள் எத்தனை உண்டு??
சீதனம் வங்குபவர்கள்,கொடுப்பவர்கள் சொல்லும் காரணங்கள்
1.சீதனம் புது வாழ்க்கையை தொடங்க உதவுமாம்.
2.சீதனம் கொடுக்காவிட்டால் status போய்விடும்
3.சீதனம் கேட்காவிட்டால் எதாவது குறைபாடு எண்டு நினைத்திடுவார்களோ?
4.பெண் கொஞ்சம் அழகு குறந்தால் சீதனத்தை கூட்டிகொடுத்து சமாளிதிடலாம்.
5.தங்கச்சிக்கு கொடுக்க வேண்டும்.
6. நான் படிக்க அம்மா பட்ட கடனை அடைக்க வேண்டும்.
இதில் எத்தனை காரணங்கள் நியாயபூர்வமானவை????
சிந்தியுங்கள்!!!!!!!!

என்னை பொறுத்தவரை சீதனம் வாங்கி ஆண்கள் ஆண் விபச்சாரி ஆகிடாதீர்கள்….
ஒவ்வொருவரும் நாங்கள் திருந்துவோம்!!
சமுதாயம் திருந்தும்!!
எத்தனை பேர் சீதனம் வாங்கமாட்டோம் என்று முடிவு எடுத்துவிட்டீர்கள்??

காண்டம் பார்க்க போனேன்!

காண்டம் பார்க்க போனேன்!!!!!
எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல்!!!
உன் அம்மா பெயர் ……………..
உன் அப்பா பெயர் …………………..
நீர் campus இலை படிக்கிறீர்..
ஓம் ஒம் எல்லாம் உண்மை.
(எப்படித்தான் கண்டுபிடித்திருப்பார்களோ,
Birth certificate எடுத்திருப்பாங்களோ)
அப்படியே கொஞ்சம் என்னைப்பற்றி சரியாவே சொன்னார்!!!
கொஞ்சம் போக முக்கியாமாக நான் கேட்க்கவிருந்த விடயத்துக்கு வந்தார்!!!!
நீ ஒரு பெண்ணை love பண்ணுறாய்..
ஓம் ஓம் ஆர்வத்தில் அகலாத்திறக்கின்றன கண்கள்..
அவள் கண்கள் மீன் போல கூர்மையானவை
அவள் மூக்கு சிவந்த மிளகாய் போல
அவள் கூந்தல் தொடும் அவள் பாதம்
அவள் நிறம் உன்னிலும் நிறம்,பொன்னிறம்,,
மொத்தத்திலை ஒரு மஹாலட்சுமி மாதிரி இருப்பாள்
இலங்கயின் தேவதை எண்டு சொல்லலாம்.
சமகல்வி!
நீ maths படிச்சா அவளும் maths படிச்சிருப்பாள்,
சம வயது, ஒருவயது குறைவாகக்கூட இருக்கலாம்....
அவள் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளை.
குடும்பத்தில் முதல் பிள்ளை இல்லை.
பெயர் உயிரில் ஆரம்பித்து வல்லின உயிர்மெய்யில் முடியும்
5 எழுத்து பெயர்.
மெல்லினம் இடையே இருக்கும்..
அ ஆ இ ஊ போன்ற அழுத்துக்களில் ஆரம்பிக்கலாம்.
மூன்றெழுத்து செல்லப்பெயரும் உண்டு.
ஓம் ஓம் என்ன எல்லாம் பார்த்தமாதிரி சொல்லுறியள்
எப்படி அண்ணே முடியுது உங்களால???
ஆனால் தம்பி
என்ன ஜயா????
அவள் உன்னை love பண்ணல!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
காணும் ஜயா!!இத்தோடை நிறுத்துங்கோ!
(எப்படித்தெரிந்திருக்கும் அவள் love பண்ணலை எண்ட விடையம் இவருக்கும்?????????)
யாவும் கற்பனை!