காதோரம் சொல்கிறேன்
நீ உலர்த்திப் போட்ட
புடவையில் இருக்கும்
பூக்களை முகர விருப்பம்!!!
நீ புரட்டி வைத்த
புத்தகத்தில் ஒரு முத்தம்
பதித்து வைக்க விருப்பம்!!!
நீ வந்து போகும்
கனவுகளில் உன்னைப்
புகைப்படம் எடுக்க விருப்பம்!!!
உன் மணிக்கட்டில்
கைக்கடிகாரம் செய்த
வெள்ளைத் தடத்தைத்
தடவிப் பார்க்க விருப்பம்!!
நீ சோம்பல் முறிக்கும்
சோபித்தை
விழியில் பருக விருப்பம்!!!
உன் பெருமூச்சின்
உஸ்ணத்தை என்னில்
ஏற்றிக் கொள்ள விருப்பம்!!!
நீ நறுக்கிப் போட்ட
நகத்தில் எனக்கோர்
மோதிரம் செய்ய விருப்பம்!!!
உன் உச்சி நெற்றியில்
தூறலாய் விழுந்து
இறங்கி வழிய விருப்பம்!!!
உன் அசைவுகளை கொண்டு
இன்னொரு அஜந்தா
எழுப்பிப் பார்க்க விருப்பம்!!!
உன் இல்லத்திலிருக்கும்
காற்றாடியாய் ஜனித்து
உனக்கு காற்று வீச விருப்பம்!!!
உன் சேலைத் தலைப்புக்குள்
முகம் மூடிக் கொண்டு
மூச்சிழுக்க விருப்பம்!!!
உன் பாதச்சுசட்டை
மழை நனைக்க வந்தால்
அதற்க்கு குடை பிடிக்க விருப்பம்!!!!!
நீ என்னை பார்த்த
நிமிசம் போதும்
புவி ஈர்ப்பு பிரிய விருப்பம்!!!!
உன் உதட்டை தீண்டிய
தேனீர் கோப்பைக்கு
விருது வழங்க விருப்பம்!!!!
உன் உடைந்த வளையல்
துண்டுகளெடுத்து
எனக்காகவொரு
கிலுகிலுப்பு செய்ய விருப்பம்!!!!
இறுதியாய் இறுதியாய்
என்னை உந்தன்
நிழலில் புதைக்க விருப்பம்!!!!!
என்னை புதைத்த இடத்தில்
உனக்கோர் பூவாய் நான்
முளைத்து நிற்க்க விருப்பம்!!!!!