சில்மிசியே

இளமைப்பூங்காவே

முறுக்கேறிய 
முல்லைக்கொடி நீ

ஒரு சில வினாடி
பூமியில் புதுவாசம்
நீ உடை மாற்றும் நேரம்

எந்தப்பூவிலிருந்தும்
திரட்ட முடியாத தேன்
உன் இதழ்

எந்த காற்றாலும் 
புரட்ட முடியாத மண் மேடு
உன் மார்பு...
 
கனிக்களஞ்சியமே 
உன்னை உலுக்குகிறேன்
மரத்தில் வைத்தே
சுவைக்கும் பழ வகைகள்
உன்னிடமே உண்டு

நீ மல்லிகை மணம் வீசும் 
மஞ்சள் கிழங்கு

சாப்பிடத்தான் போகிறேன்
உன் 
சர்கரை கோபுரத்தை


ஒரு குழல் போட்டு 
குடிக்க வேண்டும்
உன் கன்னக்குழி
தித்திப்பை

ஒரு பீற்றூட் காயின் நிறத்தில்
சிவந்த உன் உதட்டில்
சிறிது நேரம் சாகவா சொல்..........

 நன்றி
 பா.வியஜ் 

0 comments: